உபாதை காரணமாக ஆசிய கிண்ணப்போட்டியில் விளையாடவிருந்த பிரதான வீரர் இலங்கை அணியில் இருந்து நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உபாதை காரணமாக ஆசிய கிண்ணப்போட்டியில் விளையாடவிருந்த பிரதான வீரர் இலங்கை அணியில் இருந்து நீக்கம்!

பயிற்சியின் போது துஷ்மந்த சமீரவின் இடது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக துஷ்மந்த சமீர ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

துபாயில் ஆகஸ்ட் 27ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் ஆறு நாடுகள் பங்கேற்கும் போட்டிக்கு பெயரிடப்பட்ட 20 பேர் கொண்ட அணியில் சமீர இருந்தார்.

இலங்கை அணியில் இவருக்கு பதிலாக நுவன் துஷார இடம்பிடித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை ஏற்கனவே கசுன் ராஜித மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோரை இழந்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.