
கோட்டாகோகம ஆர்ப்பாட்டக் களம் காரணமாக காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதம் ரூ. 4.9 மில்லியன் என்று நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோட்டாகோகம ஆர்ப்பாட்டக் களம் காரணமாக காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட மொத்த சேதத்தை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கிட்டத்தட்ட ரூ. 150,000 பூர்வாங்க பழுதுபார்ப்பு பணிகளுக்கு தேவைப்படுகிறது, கிட்டத்தட்ட ரூ. 4.7 மில்லியன் புற்களை மீண்டும் நடவு செய்ய தேவைப்படுகிறது.
காலிமுகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஆர்பாட்டக்காரர்களிடமிருந்து சட்டரீதியாக நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னதாக தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என கோரி காலி முகத்திடல் மைதானத்தில் கோட்டாகோகம என்ற பதாகையின் கீழ் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
'கோட்டாகோகம' ஆர்ப்பாட்டக் களம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது, சமீபத்தில் ஆர்பாட்டக்கார்கள் காவல்துறையினரால் அங்கிருந்து அகற்றப்பட்டனர். (யாழ் நியூஸ்)