மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு : இவர்களுக்கு மானிய முறையில் வழங்க முன்மொழிவு

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு : இவர்களுக்கு மானிய முறையில் வழங்க முன்மொழிவு

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறுகையில், மண்ணெண்ணெய் விலை திருத்தமானது பல வருடங்களாக கட்டாயமாக இருந்தது.

ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 87 இலிருந்து  ரூ. 253 அதிகரிப்பை தொடர்ந்து, நேற்று புதிய விலை லிட்டருக்கு ரூ. 340 ஆக உயர்த்தப்பட்டது. 

இந்த விலையேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதற்கு மண்ணெண்ணையை மானிய விலையில் விற்பனை செய்வதே பிரதான காரணம் என தெரிவித்தார்.

தற்போது செலவினங்களுக்கு இணையான விலைகளுடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள தோட்டத் துறைகளுக்கு நேரடி பண மானியத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.