கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி திருட முயன்ற 13 வயது சிறுவன் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி திருட முயன்ற 13 வயது சிறுவன் கைது!!

பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் பணத்தை திருட முயற்சித்த 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரான சிறுவன் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி, கடையில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ள போதிலும், கடை உரிமையாளர் அவரைத் தடுக்க முயன்றுள்ளார். 

சம்பவத்தையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலின் விளைவாக, 33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டன.

 சந்தேகநபரான சிறுவன் இதற்கு முன்னர் பல தடவைகள் கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.