
குறித்த மாணவர் செயற்பாட்டாளர் இன்று காலை கொம்பணித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சோசலிச மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த 2வது நபரான சமிந்த கெலும்பிரிய அமரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமிந்த கெலும்பிரிய அமரசிங்க, காலி முகத்திடல் போராட்டக்காரர் டானிஷ் அலியுடன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தார்.
சமிந்த கெலும்பிரிய அமரசிங்க இன்று கறுவாத்தோட்ட பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)