சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட எ‌ரிபொரு‌ள் பாஸ் மற்றும் பிரத்தியேக பம்ப்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட எ‌ரிபொரு‌ள் பாஸ் மற்றும் பிரத்தியேக பம்ப்!


இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட எரிபொருள் அனுமதிச் சீட்டுக்களை வழங்குவது தொடர்பில் சுற்றுலா அமைச்சு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

நிகழ்வொன்றில் உரையாற்றிய சுற்றுலா அமைச்சர், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் எரிபொருள் அனுமதிச் சீட்டுகளை கொள்வனவு செய்வதை அறிமுகம் செய்ய உள்ளோம். 

டாலரில் பணம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் எரிபொருள் பாஸ் டாப்-அப் முறையின் கீழ் இயக்கப்படும்,” என்று அவர் விளக்கினார். 

அமைச்சர் மேலும் கூறுகையில், இந்த சுற்றுலா எரிபொருள் பாஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பிரத்தியேக பம்ப் ஒதுக்கப்படும் என தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.