ஹிருணிகா உள்ளிட்ட 10 பேர் தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹிருணிகா உள்ளிட்ட 10 பேர் தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 10 பேரை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக ஹிருணிகா உள்ளிட்ட 10 பேர் போராட்டம் நடத்தியமை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை 06 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஹிருணிகா மற்றும் குழுவினர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த வழக்கு இன்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த குழுவை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

மேலும் முறையான விசாரணைகளை நடத்தி மீண்டும் கோரிக்கையை சமர்பிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி மேலும் அறிவுறுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.