பல பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது!

காலி பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் பலரை சமூக ஊடகங்கள் ஊடாக ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

காலியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பல சிறுவர்களை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், பிரபல கோவிலை நடத்தி வரும் அர்ச்சகர் என்ற போர்வையில் வாட்ஸ்அப் மூலம் குழந்தைகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.