
லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சந்தேகநபர்களால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் லுணுகல மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறுமியை கடத்திச் சென்று 08 நாட்களாக உடகிருவ வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)