14 வயதுடைய சிறுமியை கடத்திய முதியவர் உட்பட இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 வயதுடைய சிறுமியை கடத்திய முதியவர் உட்பட இருவர் கைது!

லுணுகல, உடகிருவ வனப் பகுதியில் உள்ள உடகிருவ பிரதேசத்தில், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து, குறைந்த வயதுடைய சிறுமியைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சந்தேகநபர்களால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் லுணுகல மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறுமியை கடத்திச் சென்று 08 நாட்களாக உடகிருவ வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.