நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடிக்கு காரணம் இது தான் - இவரும் பொறுப்பு கூற வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடிக்கு காரணம் இது தான் - இவரும் பொறுப்பு கூற வேண்டும்!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்திய முக்கிய நபர் முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அப்போதைய அமைச்சர் உதய கம்மன்பில கூறியதால், மக்கள் அதிகளவில் எரிபொருளை குவிக்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆனால் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க தற்போதைய பொறுப்பு அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் வளங்கள் இல்லாத வேளையில் வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு திரு.காஞ்சன விஜேசேகர எடுத்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.