இலங்கைக்கு வரவுள்ள சீன எரிபொருள் நிறுவனம் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு வரவுள்ள சீன எரிபொருள் நிறுவனம் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

சீனாவின் மிகப்பெரிய நிறுவனமான சினோபெக் நாட்டில் எரிபொருளை விநியோகிக்கவும், எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்யவும் மற்றும் விற்பனை செய்யவும் வர வாய்ப்புள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ந்த அதிகளவான நிறுவனங்களை நாட்டின் எரிபொருள் சந்தையில் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் எண்ணெய் விநியோகத்தில் 90% அரசாங்கத்தினாலும் எஞ்சிய 10% இந்திய எண்ணெய் நிறுவனத்தினாலும் வழங்கப்படுகின்றன.

தற்போது, ​​ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சீன நிறுவனங்கள் எண்ணெய் சேமிப்புக் கூடத்தை நிர்மாணித்து வருகின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.