போராட்டக்காரர்களால் திருடப்பட்டதாக கூறப்பட்ட T56 துப்பாக்கி மீட்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போராட்டக்காரர்களால் திருடப்பட்டதாக கூறப்பட்ட T56 துப்பாக்கி மீட்கப்பட்டது!

கடந்த ஜூலை 13ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களால் திருடப்பட்டதாக கூறப்பட்ட T56 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. 

ஜூலை 13ஆம் திகதி வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அவ்விடத்தில் கடமையாற்றிய இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்ப்பாளர்களால் தாக்கி T56 ரக துப்பாக்கி திருடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஜூலை 23 அன்று, கடற்படை நீர்மூழ்கிக் குழுவினர், தியவண்ணா நீர்த்தேக்கத்தின் பாராளுமன்றம் நோக்கிய ராஜகிரிய சமனல பாலத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் கீழ் மேற்படி கொள்ளையிடப்பட்ட துப்பாக்கியைக் கண்டுபிடித்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.