நேற்று (24) இரவு பொரளை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பிரபல பாதாள உலக தலைவரான 'சொத்தி உபாலி'யின் இளைய மகன் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் கத்திக்குத்துக்கு உள்ளாகியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் பொரளை பிரதேசத்தில் வசிக்கும் டொன் சிரந்த கயா ஜெயசங்க அல்லது "கயா" எனும் 27 வயதுடையவர்.
மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று நடைபெற உள்ளது.