டெஸ்ட் கிரிக்கட்டில் சாதனை படைத்த பிரபாத் ஜயசீதிய!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டெஸ்ட் கிரிக்கட்டில் சாதனை படைத்த பிரபாத் ஜயசீதிய!

சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் 8 ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸ்:  6/118
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆவது இன்னிங்ஸ்: 6/59
  • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இன்னிங்ஸ்: 5/35*

பிரபாத் ஜயசூரிய 2 ஆவது இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், முதல் இரண்டு டெஸ்டில் 4 ஐந்து விக்கெட்டுகளை எடுத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோருக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆவார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.