தனிஸ் அலியின் கைது தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிஸ் அலியின் கைது தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அறிக்கை!


கோட்டாகோகம செயற்பாட்டாளர் தனிஸ் அலி பாண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் துபாய்க்கு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

இவரை கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட விதம் அடங்கிய காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபணத்துக்குள் பிரவேசித்தமை மற்றும் ஒளிபரப்பை சீர்குலைக்க முயற்சித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். 

தனிஸ் அலிக்கு எதிராக கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜூலை 22ஆம் திகதி பிடியாணை பிறப்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது(யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.