ஜனாதிபதி, பிரதமர் இருவரும் ஒரே சமயம் பதவி விலகுவது பிரச்சினையை அதிகரிக்கும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி, பிரதமர் இருவரும் ஒரே சமயம் பதவி விலகுவது பிரச்சினையை அதிகரிக்கும்!


இலங்கையின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே நேரத்தில் வெளியேறினால் மக்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

"எல்லாக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அரசாங்கம் எந்த மாதிரியான கொள்கைகளை உருவாக்கப் போகிறது என்பதும் முக்கியம். 'பிரதான அதிகாரங்கள் முறையே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் உள்ளதை நாம் அறிவோம். ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறினால் நாட்டில் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கலாம்.

எனவே முதலில் ஒருவர் வெளியேறி பின்னர் புதிய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மற்றையவர் வெளியேறுவது பொருத்தமானது என்பது எனது கருத்து." என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.