சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச “தனிப்பட்ட பயணம்” முறையில் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பதை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது. 

அங்கு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, "கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் புகலிடம் கோரவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவும் இல்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடம் வழங்குவதில்லை" எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)

Update:
கோட்டாபய ராஜபக்ச "தனிப்பட்ட பயணத்தில் வந்துள்ளார். சமூக விசிட் பாஸில் இருக்கிறார்" என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் கோட்டாபயவுக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக மக்களை எச்சரிக்கும் காவல்துறை, "சட்டவிரோதமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.