நாளை பாராளுமன்றம் கூடாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை பாராளுமன்றம் கூடாது!

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளைய தினம் (15) பாராளுமன்றம் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கிடைத்தவுடன் மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை (13) இராஜினாமா செய்யும் பட்சத்தில், புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி கோரப்படும் என சபாநாயகரின் தலைமையில் கடந்த சனிக்கிழமை விசேட கலந்துரையாடலைக் கூட்டிய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை மறுநாள் (20) நடத்தப்படும் எனவும் அவர்கள் தீர்மானித்திருந்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.