பாதுகாப்புப் படையினரின் சீருடைகளுக்கு நிகரான சீருடை அணிந்திருந்த வெளி தரப்பினரால் தாக்குதல்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாதுகாப்புப் படையினரின் சீருடைகளுக்கு நிகரான சீருடை அணிந்திருந்த வெளி தரப்பினரால் தாக்குதல்?


ஜனாதிபதி அலுவலகத்தில் தங்கியிருந்த ஆர்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் சீருடைகளுக்கு நிகரான சீருடை அணிந்திருந்த வெளி தரப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார். 

ஆர்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேறவுள்ளோம் என்று அறிவித்தல் விடுத்திருந்த போதிலும் பாதுகாப்புப் படையினரின் இவ்வாறான தாக்குதலின் பின்னர் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இத்தாக்குதல்கள் மூலம் அரச பயங்கரவாதத்தைக் கொண்டு வந்து மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்க அரசாங்கம் தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது என அவர் கூறுகிறார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.