எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு என்னிடம் பதில் உண்டு! -ரத்தன தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு என்னிடம் பதில் உண்டு! -ரத்தன தேரர்

இன்று நாடு எதிர்நோக்கும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தன்னிடம் பதில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். 

மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற இலங்கை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அவ்வாறான வேலைத்திட்டம் உள்ளதா என்பதை இன்னும் சில நாட்களில் கூறமுடியும் எனவும் அது அவரால் முடியாமல் போனால், தனது பணிகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரதன தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.