நாடளாவிய எ‌ரிபொரு‌ள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமை வெற்றி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடளாவிய எ‌ரிபொரு‌ள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமை வெற்றி!

நாடளாவிய ரீதியில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (23) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், QR குறியீட்டின் கீழ் 20 இடங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திரம் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, 4,708 வாகனங்கள் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வழிவகைகள் செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 25 இடங்களில் எரிபொருள் சோதனைகளை மேற்கொள்ளவிருந்ததாகவும், கோரப்பட்ட இருப்பு வழங்கப்படாமை, தாமதம் மற்றும் விநியோக குறைபாடுகள் காரணமாக மேலும் 5 இடங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பரிசோதிக்க முடியாமல் போனதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

அந்த 5 நிரப்பு நிலையங்களில் எதிர்வரும் இரண்டு நாட்களில் அனுமதிப்பத்திரம் சோதனையிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.