ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட அதிகாரி!

இன்று சனிக்கிழமை (23) அதிகாலையில் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டதாகக் கூறப்படும் மரணம் பதிவாகியுள்ளது.

ரயிலுக்குள் மது அருந்திக் கொண்டிருந்த சில பயணிகளை மற்ற பயணிகளின் முறைப்பாட்டையடுத்து, புகையிரதத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட பயணிகளை பெட்டியிலிருந்து அழைத்துச் செல்லும் நேரத்தில், சந்தேக நபர்களில் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியை உதைத்துள்ளார், அங்கு அவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வேயங்கொடையை அண்மித்துச் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, வேயங்கொட பொலிஸார், வதுராவ புகையிரத நிலையத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் கிடந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்தை மீட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)




உயிரிழந்தவர் 52 வயதுடைய ஒருத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், சந்தேகநபர்கள் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.