எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் உயிரிழப்பு!

காலியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலி மாகல்ல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.