
நபர் ஒருவர் குறித்த கொடியை பெட்ஷீட்டாகப் பயன்படுத்தி அந்த படுக்கையில் படுத்திருந்தது வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
அதில் அவர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தீயிட்டு அழிப்பதாக கூறியதாகக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் கொடியை எடுத்துச் சென்ற நபர் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காணக்கூடியதாகத் தெரிவித்த பொலிஸார், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)