மாணவர்களுக்கான பொது பஸ் சேவைகள் ஆரம்பம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களுக்கான பொது பஸ் சேவைகள் ஆரம்பம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் புதிய பஸ் சேவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தில் சாதாரண கட்டணத்தின் கீழ் சுமார் 40 பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மெரெண்டா தெரிவித்தார்.

கொழும்பு பிரதான பாடசாலைகள் மற்றும் கம்பஹா, களுத்துறை, ஹொரணை, ஹோமாகம, மஹரகம மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள ஏனைய பாடசாலைகள் போன்ற பிரதேசங்களில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு இலகுவான பயணத்தை வழங்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய பஸ்களின் எண்கள் மற்றும் புறப்படும் நேரங்கள் கீழே உள்ளன, (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.