ராஜபக்ஷ குடும்பத்துக்கு இந்திய இராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும்! -பாஜக

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜபக்ஷ குடும்பத்துக்கு இந்திய இராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும்! -பாஜக


இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய  இராணுவத்தை அனுப்புமாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைத்துள்ளார். 

“கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 “அப்படியானால் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்ஷ விரும்பினால் நாங்கள் வழங்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணியம் சுவாமி ஆவார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.