ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் பொலிஸ் அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் பொலிஸ் அறிக்கை!

ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த பணத் தொகை தொடர்பில் நாளைதினம் (10) நீதிமன்றத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பணத் தொகை ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து போராட்டக்காரர்களுக்கு கிடைத்திருந்தது.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் அவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்திருந்தனர்.

இது தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் போராட்டக்காரர்களிடம் இருந்து குறித்த பணத் தொகை பொறுப்பேற்கப்பட்ட நிலையில் குறித்த பணத்தொகை தற்பொழுது கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பின் கீழ் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.