இந்திய கடனுதவியுடன் எரிபொருள் பெற்றுக்கொள்ள பசில் ராஜபக்சவினால் விசேட குழு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய கடனுதவியுடன் எரிபொருள் பெற்றுக்கொள்ள பசில் ராஜபக்சவினால் விசேட குழு!

இந்திய கடனுதவியின் கீழ் அதிக எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கடன் வசதிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்காலத்திலும் தொடரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் அண்மையில் பசில் ராஜபக்சவுக்கும் பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இந்தியாவிடமிருந்து மேலதிக சலுகைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க பசில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் பசில் ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் பல நடைபெற உள்ளதாகவும், இதுவரை இந்த நாட்டிற்கு வந்துள்ள அனைத்து எரிபொருள் கப்பல்களும் பெறப்பட்ட கடன் உதவியின் கீழ் வந்துள்ளதாகவும் இந்திக அனுருத்த மேலும் தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்த போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.