புதிய கடவுச்சீட்டு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய கடவுச்சீட்டு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் 2022 ஜூலை 04 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடக அறிவிப்பை வெளியிட்டு திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், குறிப்பிட்ட பிராந்திய அலுவலகங்களில் ஏற்கனவே திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துள்ள 100 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் இடமளிக்கப்படும்.

www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தில் ஏற்கனவே பிராந்திய அலுவலகங்களில் சாதாரண சேவைக்காகப் பதிவு செய்தவர்களுக்கு இந்தச் சேவை வழங்கப்படும் என திணைக்களம் மீண்டும் வலியுறுத்துகிறது மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் வருகை தரவேண்டாம் என கோரியுள்ளது.

தலைமை அலுவலகத்தில் ஒரு நாள் சேவைக்காக ஏற்கனவே பதிவு செய்துள்ள வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் முன்னுரிமை பெற ஆவண ஆதாரங்களுடன் 0706311711 என்ற எண்ணுக்கு WhatsApp (வாட்சப்) தகவல் அனுப்புமாறு அறிவிப்பு மேலும் கேட்டுக்கொள்கிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.