எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்று (01) பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், அசௌகரியத்திற்கு உள்ளான ஏராளமான பொதுமக்கள், கோட்டை ரயில் நிலையத்தில் அமைதியின்மை ஏற்படுத்தி வருகி்ன்றனர்.
அத்தியாவசிய சேவை என குறிப்பிடப்பட்டு எரிபொருள் வழங்கும் நிலையில் புகையிரத ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என புகையிரத ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலவும் சூழ்நிலை காரணமாக ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், என்ஜின் சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர். (யாழ் நியூஸ்)