தமது விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமது விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம்!


நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீள் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் இந்த மீள் நிரப்பப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் அதிகளவில் தினசரி விநியோகிக்கவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க 1,345 என்ற வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுமாறு லாஃப்ஸ் நிறுவனம் நுகர்வோரை கோரியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.