சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்க தயக்கம் - காரணம் இது தான்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்க தயக்கம் - காரணம் இது தான்

நிதியுதவி வழங்குவதற்கு முன் கடன் மறுசீரமைப்பு மற்றும் ஊழலை அகற்ற கட்டமைப்பு சீர்திருத்தங்களை துரிதப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், அந்நிய செலாவணி கையிருப்பின் கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க குறைந்தது 4 பில்லியன் டாலர்களையாவது பெற வேண்டும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டில் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் அதிகாரிகள் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர்களுடன் கலந்துரையாடல்களை தொடர நம்புகிறோம் எனவும் சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடலின் முடிவில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், பொதுக் கடனின் நிலைத்தன்மையின்மை காரணமாக, இலங்கையின் கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு போதுமான உத்தரவாதம் இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.

பேச்சுவார்த்தைக்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது விஜயத்தின் இறுதியில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவது தொடர்பாக உடன்பாடு ஏற்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூலை மாதம் தொடங்கும், அதன்படி, ஒரு சிலருக்கு சர்வதேச நாணய நிதியத்தில் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.