ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள 3 அதிரடி தீர்மானங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள 3 அதிரடி தீர்மானங்கள்!


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அவசரகாலச் சட்டம் தொடர்பான பிரகடனம் நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

சட்ட விதிகளின்படி, மேற்படி பிரகடனத்திற்கு 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படாவிட்டால், அது ரத்து செய்யப்படும். 

இன்று கூடிய SJB, அதன் பாராளுமன்ற குழு மற்றும் அதன் செயற்குழு ஆகியவை நாளை பாராளுமன்றத்தில் அவசரகால பிரகடனத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளன. 

அரச ஆதரவு பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறிய புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதில்லை எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள் நியமிக்கப்படும் பாராளுமன்ற குழுக்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.