
நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறுகிறார்.
ரஷ்ய அரசாங்கம் இலங்கைக்கு கோதுமையை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)