செய்ய வழியில்லை! எரிபொருளை இவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும்! -வலுசக்தி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செய்ய வழியில்லை! எரிபொருளை இவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும்! -வலுசக்தி அமைச்சர்


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாடிக்கையாளர்களை பதிவு செய்து, வாராந்தம் உத்தரவாத அடிப்படையில் எரிபொருள் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

போதிய அளவான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டாலும், தொடர்ந்தும் எரிபொருளுக்கான வரிசை நீள்கிறது.

சிலர் தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்து சேமிப்பதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

வழமையான மின்விநியோகம் வழமைக்கு திரும்பும் வரை எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருள் முகாமைத்துவத்தை மேற்கொள்ள முடியாது.

நிதி கட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் இறக்குமதி ஒரு வாரத்திற்கு கையிருப்பில் உள்ளது.

24 மணி நேர மின் விநியோகத்தை மேற்கொள்வதற்கான டீசல், உலை எண்ணெய் மற்றும் நெப்டா என்பனவற்றிக்காக மாதாந்தம் மேலதிகமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

எரிவாயுவின் விநியோகப் பற்றாக்குறை காரணமாக மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெயின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

4 மாதங்களுக்கு முன்னர் எரிபொருளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில் தற்போது 550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் எரிபொருளுக்கான காத்திருப்பு தொடர்கிறது.

சில பகுதிகளில் வாகன சாரதிகள் இரவு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.