அதிகரிக்கும் சமையல் எரிவாயு விலை - லிட்ரோ கேஸ் லங்கா அறிவிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரிக்கும் சமையல் எரிவாயு விலை - லிட்ரோ கேஸ் லங்கா அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ. 200 இனால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதித பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அடுத்த நான்கு மாதங்களுக்கு ஓமானில் உள்ள நீண்ட கால விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதாற்கு முன்பு தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்த முதித பீரிஸ், விநியோகஸ்தர் 6000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு மட்டுமே விலையை குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், ஓமானில் உள்ள விநியோகஸ்தர் தாய்லாந்தின் விநியோகஸ்தரை விட சற்றே அதிக விலையை மேற்கோள் காட்டியுள்ளார், ஆனால் குறைந்தபட்சம் 100,000 மெட்ரிக் டன் எரிவாயு ஆர்டருக்கு, அவர்கள் 03 முதல் 04 மாதங்களுக்கு எரிவாயுவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் தற்போதைய எரிவாயு தேவையை கருத்தில் கொண்டு ஓமானில் உள்ள விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் தலைவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.