விவசாயிகளால் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளில் 40% நுகர்வோரை சென்றடையும் முன்னரே அழிந்துவிடுகின்றன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விவசாயிகளால் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளில் 40% நுகர்வோரை சென்றடையும் முன்னரே அழிந்துவிடுகின்றன!

விவசாயிகளால் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளில் 40% நுகர்வோரை சென்றடையும் முன்னரே அழிந்துவிடுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அமில திபதுவ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை காரணமாக நாட்டில் 40% முதல் 50% வரை உணவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும், வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் கிடைக்காததும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கலாநிதி பொறியியலாளர் அமில திபதுவ மேலும் தெரிவிக்கையில், நாட்டில் குறிப்பிட்ட அளவு உணவுப் பொருட்கள் நுகர்வோரிடம் உரிய முறையில் கையளிக்கப்படுவதற்கு முன்னர் விநியோகச் சங்கிலியில் அழிந்து விடுகின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.