ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர, வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் 7 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மரதானை பொலிஸில் சரணடைந்த அவர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)