சகல பாடசாலைகளுக்கும் அடுத்த வாரம் விடுமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சகல பாடசாலைகளுக்கும் அடுத்த வாரம் விடுமுறை!


கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையவழியாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொழும்பு புறநகர் பகுதிகள், வெளிமாவட்ட நகர எல்லைகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்கள் அடுத்த வாரம் மூடுவதா அல்லது இணையத்தில் செயல்படுவதா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கிராமப்புற பாடசாலைகளின் தலைமையாசிரியர்கள் போக்குவரத்து வசதிகளைப் பொறுத்து தங்கள் செயல்பாடுகளை முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.