அடுத்த 500 மில்லியன் டொலர் எரிபொருள் கடனை தருவதற்கு இந்தியா தயக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த 500 மில்லியன் டொலர் எரிபொருள் கடனை தருவதற்கு இந்தியா தயக்கம்!


இலங்கையின் அண்மைய நம்பிக்கை மீறல் காரணமாக இலங்கைக்கு அடுத்த 500 மில்லியன் டாலர் எரிபொருள் கடனை வழங்க இந்தியா தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கிய நிலையில் கடன் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. 

அதன்படி, கடந்த வியாழன் (16) அன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த டீசல் கப்பல் கடந்த வியாழன் முதல் எரிபொருள் கடன் சலுகையின் கீழ் வந்ததை அடுத்து எதிர்காலத்திற்கான எரிபொருள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் கடனுதவி வழங்குவது குறித்த நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர விரிசலை உருவாக்கும் விதத்தில் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எச்.எம்.சி. பெர்டினண்டோ மன்னார் அனல்மின் நிலையம் தொடர்பில் அண்மையில் கோப் ஆணைக்குழுவில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தின் விளைவாகும்.

இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்காக இந்திய பிரதமர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்ததாக அந்த அறிக்கையில் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த அறிக்கை இரு நாடுகளிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, சில உள்ளூர் குழுக்கள் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான உணர்வை உருவாக்கி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.