![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt9Xe1dJDd5O9sqG_vuFY3Sh5N7d2mBCrLijmv-Sn6W8tHHzKv-z3H9-cEyCu8cDGiLi-qk6yIyQiQH21XHB72GxhZkjgq6f5UDp8v-JVv9vkI38-ej18mhm_UqiVitbinrUh65yyQBGg/s16000/1651942055629202-0.png)
எனினும், ஒருநாள் சேவை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 05ஆம், 06ஆம் மற்றும் எதிர்வரும் 09ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளன.
அத்துடன், கடந்த 05ஆம் திகதி சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்களை கையளிப்பதற்காக திணைக்களத்திற்கு சென்று, இலக்கம் அல்லது திகதி முத்திரையை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விண்ணப்பங்களை கையளிப்பதற்கு முற்கூட்டிய நேரத்தை ஒதுக்கி கொள்வது அவசியமாகும்.
மேலும் 070 71 01 060 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதற்கான காலம் மற்றும் நேரத்தினை ஒதுக்கி கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.