பொது மக்களுக்கான குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது மக்களுக்கான குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் மீண்டும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒருநாள் சேவை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 05ஆம், 06ஆம் மற்றும் எதிர்வரும் 09ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளன.

அத்துடன், கடந்த 05ஆம் திகதி சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்களை கையளிப்பதற்காக திணைக்களத்திற்கு சென்று, இலக்கம் அல்லது திகதி முத்திரையை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விண்ணப்பங்களை கையளிப்பதற்கு முற்கூட்டிய நேரத்தை ஒதுக்கி கொள்வது அவசியமாகும்.

மேலும் 070 71 01 060 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதற்கான காலம் மற்றும் நேரத்தினை ஒதுக்கி கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.