![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisP3xfuumaYKt9g7kaPKHRhUTBKeVkeu6MUU-JkUeWKS8wtCgwExPLeUA0dxCB9vqflF_gmpjJ6r_J8CIeKHzK6CDy-2Ixuqs0uNLoRUJYSbyui5ZWUsd-Lv8Plq5J9FFzEX6NpRPl-olgYomGQxbg21iLc2N4o3UWbCulNQ8QC0ZwhpD4LN7EPqrYzw/s16000/77C1BC12-7E0E-43A4-BA55-5E9A5692D833.jpeg)
ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கட்சி மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கை குறித்து விரைவில் கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனினும், கலந்துரையாடல் குறித்த மேலதிக விபரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
எவ்வாறாயினும், முறையான முறைமை இருந்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்து நாட்டை ஆளத் தயார் என மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் நாளை அலரிமாளிகைக்கு முன்பாக அழைக்கப்பட்டுள்ளனர். 'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் பிரதமருக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)