ஜனாதிபதுக்கு எதிராக மொட்டு சின்ன உறுப்பினர்கள் - அலரி மாளிகைக்கு அழைக்கப்படவுள்ள ஆதரவாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதுக்கு எதிராக மொட்டு சின்ன உறுப்பினர்கள் - அலரி மாளிகைக்கு அழைக்கப்படவுள்ள ஆதரவாளர்கள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு நாளை அழைப்பு விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கட்சி மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கை குறித்து விரைவில் கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும், கலந்துரையாடல் குறித்த மேலதிக விபரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

எவ்வாறாயினும், முறையான முறைமை இருந்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்து நாட்டை ஆளத் தயார் என மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் நாளை அலரிமாளிகைக்கு முன்பாக அழைக்கப்பட்டுள்ளனர். 'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் பிரதமருக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.