ஹர்த்தாலின் போது கட்டப்பட்ட கறுப்பு கொடிகளை கலற்றி எறிந்த மொட்டு சின்ன உறுப்பினர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹர்த்தாலின் போது கட்டப்பட்ட கறுப்பு கொடிகளை கலற்றி எறிந்த மொட்டு சின்ன உறுப்பினர்கள்!

பெந்தோட்டை சாதாரண மக்களைப் பாதிக்கும் போராட்டங்களை இங்கு தொடர அனுமதிக்கப் போவதில்லை என பெந்தோட்டை பிரதேச சபையின் பொதுஜம பெரமுன (மொட்டு சின்னம்) உறுப்பினர் சமில ஜயசேகர பெந்தோட்டையில் தெரிவித்துள்ளார்.

பெந்தோட்டை நகரம் மற்றும் பெந்தர பாலத்தின் இருபுறங்களிலும் ஹர்த்தால் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கட்டியிருந்த கறுப்புக் கொடிகளை அகற்றிய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் இக்கட்டான நிலையில் உள்ளதை ஒப்புக்கொண்ட அவர், நாட்டு மக்களையும் பொதுமக்களையும் பாதிக்கும் ஹர்த்தால் மற்றும் வீதிகளை மூடுவது போன்ற செயற்பாடுகளை நடத்துவதை தாம் ஏற்கமாட்டேன் எனவும், எதிர்காலத்தில் ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெந்தர எதிர்ப்பு ஹர்த்தால்களை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் பெந்தோட்டை பாலத்தின் இருபுறமும் இருந்த கறுப்புக்கொடிகளை அகற்றி பெந்தோட்டை ஆற்றில் வீசி எறிந்தனர்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த இடத்தில் ஒரு குழு மீண்டும் கருப்புக் கொடிகளைக் காட்டியதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.