இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கையிலிருப்பில் இருக்கும் டீசல் இவ்வளவு தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கையிலிருப்பில் இருக்கும் டீசல் இவ்வளவு தான்!

டீசல் கப்பல் ஒன்று நாட்டுக்கு வரும் வரை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் 4000-5000 தொன் டீசல் மாத்திரமே இருக்கும் என எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியக் கடன் உதவியுடன் மே 15 ஆம் தேதிக்குள் டீசல் கப்பல் வரும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

ஒரு வாரத்திற்கு போதுமான பெட்ரோல் மற்றும் ஒரு மாதத்திற்கு போதுமான ஜெட் எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அவர் கூறினார்.

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண எரிசக்தி அமைச்சு புதிய அரசாங்கத்திடம் தொடர் யோசனைகளை சமர்ப்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

விமான எரிபொருள் முகாமைத்துவம் தொடர்பில் விமான நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறைக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அங்கு தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.