
இந்தியக் கடன் உதவியுடன் மே 15 ஆம் தேதிக்குள் டீசல் கப்பல் வரும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
ஒரு வாரத்திற்கு போதுமான பெட்ரோல் மற்றும் ஒரு மாதத்திற்கு போதுமான ஜெட் எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அவர் கூறினார்.
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண எரிசக்தி அமைச்சு புதிய அரசாங்கத்திடம் தொடர் யோசனைகளை சமர்ப்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
விமான எரிபொருள் முகாமைத்துவம் தொடர்பில் விமான நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறைக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அங்கு தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)