advertise here on top
Join yazhnews Whatsapp Community

மீண்டும் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்த லிட்ரோ லங்கா நிறுவனம்!

லிட்ரோ லங்கா நிறுவனம் நாளையும் (25) சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.

12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் நாளை விநியோகிக்கப்படாது என முதன்மை எரிவாயு வழங்குநர் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் என அந்நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

3500 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயு (LPG) ஏற்றுமதி வியாழக்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் பல மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.