advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெள்ளத்தில் மூழ்கின க.பொ.த பரீட்சை நிலையங்கள்!


புத்தளம் மாவட்டத்தில் நேற்றும் இன்று காலையும் பெய்த அடை மழை காரணமாக சாஹிரா கல்லூரி மற்றும் புத்தளம் புனித அன்ட்ரூஸ் கல்லூரியில் உள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

இலங்கை இராணுவத்தின் 143 படைப்பிரிவு மற்றும் கடற்படையுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ நிலையம், பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து, இந்த நிலைமை பரீட்சைகளை நடத்துவதற்கு இடையூறாக அமையும் என்பதால், அந்த கல்லூரிகளின் வெள்ள அபாய பரீட்சை நிலையங்களை உடனடியாக வேறு பாதுகாப்பான பாடசாலை கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளது.

இந்த விரைவான ஒருங்கிணைப்பு நடவடிக்கையால், இந்த இரண்டு கல்லூரிகளின் தேர்வும் தடையின்றி இன்று நடைபெற்றது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.