எனக்கு ஜனாதிபதியுடன் எந்த தொடர்பும் இல்லை - தான் இராணுவ அனுசரணையினால் ஆதாயம் பெறவில்லை - ஞானக்கா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனக்கு ஜனாதிபதியுடன் எந்த தொடர்பும் இல்லை - தான் இராணுவ அனுசரணையினால் ஆதாயம் பெறவில்லை - ஞானக்கா!

அநுராதபுரம், இசுறுப்பு பகுதியைச் சேர்ந்த 'ஞானக்கா' என்றழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசியல் விவகாரங்கள் மற்றும் நாட்டை ஆட்சி செய்வது குறித்து ஆலோசனை வழங்குவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.

வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியல் அல்லது இராணுவ அனுசரணையால் தான் ஆதாயம் அடைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று சுட்டிக்காட்டினார்.

தான் கட்டியதெல்லாம் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணம் என்றும், இன்று அது கொள்ளையடிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் குடும்பத்தினரின் பணியாட்கள் தனது கோவில் மைதானத்தை துடைத்து, ஜனாதிபதியை தனது கைகளால் குளிப்பாட்டுவார்கள் என்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

ஜனாதிபதி தம்மை குளிப்பாட்டியதில்லை எனவும், தனது புனித இடத்தில் அவ்வாறான இடம் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

தான் வேறு யாரோ என்றும், தன் அருட்தாய் வேறு ஒருவர் என்றும், மன சக்தி அருட்தாய்க்கே வரும் என்றும், தனக்கு அல்ல என்றும், அருட்தாய் அறையில் சொன்ன அறிவுரைகள் தனக்கு நினைவில் இல்லை என்றும் கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.