முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகும் குற்றவாளிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகும் குற்றவாளிகள்!

அனுராதபுரத்தில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம். சந்திரசேன, சன்ன ஜயசுமன மற்றும் துமிந்த திசானாயக்க ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 04 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மே 9 ஆம் திகதி அமைதியின்மையின் போது வன்முறைச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களை 1997 மற்றும் 119 தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று காலை அரசாங்க பாராளுமன்ற குழு கூட்டத்திற்கு ஜனாதிபதியினால் அழைக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர், அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை ஒரு வாரத்திற்குள் கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.