பொதுமக்கள் பலர் இன்னும் மூன்றே மாதங்களில் இறப்பர்கள் - அமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்கள் பலர் இன்னும் மூன்றே மாதங்களில் இறப்பர்கள் - அமரவீர

இன்னும் மூன்று மாதங்களில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பார்கள் என இலங்கை சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இணைய அலைவரிசை ஒன்றின் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் இலங்கை சுதந்திரக் கட்சி பல எச்சரிக்கைகளை விடுத்திருந்ததாகவும், அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்து பொதுஜன பெரமுன தனது கட்சியை மீறி செயற்பட்டதாகவும் திரு. அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் பெருமளவிலான மக்கள் இறக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய திரு. அமரவீர, சர்வகட்சி கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதே இதற்கு ஒரே தீர்வு எனவும் வலியுறுத்தினார்.

ராஜபக்ச ஆட்சியானது வெளிப்படையான கொள்முதல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பல சந்தர்ப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்த திரு. அமரவீர, அந்தச் சந்தர்ப்பங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால், அவர் இன்று உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

நாட்டின் உள்நாட்டு நெருக்கடிக்கு தீர்வு காண ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் இணைந்து சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்காவிட்டால், தமது கட்சியும் பொதுஜன பெரமுனவும் அரசாங்கத்துடன் எவ்வித உடன்படிக்கையிலும் ஈடுபடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.