மைனா கோ கம போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ஆதரவு குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மைனா கோ கம போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ஆதரவு குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்!


அலரி மாளிகைக்கு முன்பாக பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மைனா கோ கம போராட்டக்குழுவினர் மீது குண்டர் குழுவொன்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் அழைத்து வரப்பட்டவர்களின் ஒரு குழுவினரே இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.

அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் அங்கு பதற்றமான நிலைமை நிலவுகிறது.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகக்கூடாதென தெரிவித்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்..

பின்னர் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் ‘கோட்டா கோ கம’ பகுதிக்கு ஆக்ரோசமாக முன்னேறி சென்றனர்.

கோட்டா கோ கம போராட்டக்களத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட பொதுஜன பெரமுன குண்டர்கள் காலிமுகத்திடல் சுற்று வட்ட பகுதியில் பொலிசாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

எனினும், ஒரு பகுதியினர் கோட்டா கோ கம போராட்டக்களத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், கூடாங்களையும் அடித்துடைத்தனர்.

பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தினர்.

இதுவரை 09 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.